<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13257613</id><updated>2011-12-14T18:51:07.571-08:00</updated><title type='text'>வானவில்</title><subtitle type='html'>Short stories and Poems in Tamil</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-2910983859379106033</id><published>2008-06-26T09:33:00.000-07:00</published><updated>2009-06-05T03:27:04.578-07:00</updated><title type='text'>மாற்றம்</title><content type='html'>&lt;blockquote&gt;"&lt;span style="font-weight:bold;"&gt;மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமில்லாதது&lt;/span&gt;"&lt;/blockquote&gt;&lt;br /&gt;எனது வலைப்பதிவு இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;a href="http://www.uiman.com/vaanavil"&gt;www.uiman.com/vaanavil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-2910983859379106033?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/2910983859379106033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=2910983859379106033' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/2910983859379106033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/2910983859379106033'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2008/06/blog-post.html' title='மாற்றம்'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-5301229663089727715</id><published>2007-10-26T06:03:00.000-07:00</published><updated>2007-10-26T06:08:55.357-07:00</updated><title type='text'>நம் காதல்</title><content type='html'>உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில் &lt;br /&gt;இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது &lt;br /&gt;என் உடல்...!&lt;br /&gt;&lt;br /&gt;உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே&lt;br /&gt;சிக்கிக்கொண்டுள்ளது &lt;br /&gt;என் மனது...!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,&lt;br /&gt;ஒளிந்துகொண்டுள்ளது&lt;br /&gt;என் வயது...!&lt;br /&gt;&lt;br /&gt;உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்&lt;br /&gt;அலைந்துகொண்டிருக்கிறது&lt;br /&gt;என் வாழ்க்கை...!&lt;br /&gt;&lt;br /&gt;உன் கன்னக் குழிகளில் &lt;br /&gt;புதைந்து இறந்து போகிறது &lt;br /&gt;என் கோபம்...!&lt;br /&gt;&lt;br /&gt;உன் வார்த்தைகளின் இடைவெளிகளில் &lt;br /&gt;மறைந்து கொள்கிறது &lt;br /&gt;என் மௌனம்...!   &lt;br /&gt;&lt;br /&gt;உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்&lt;br /&gt;ஒட்டிக்கொண்டுள்ளது &lt;br /&gt;நம் காதல்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-5301229663089727715?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/5301229663089727715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=5301229663089727715' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/5301229663089727715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/5301229663089727715'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2007/10/blog-post.html' title='நம் காதல்'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-116048314012396207</id><published>2006-10-10T05:25:00.000-07:00</published><updated>2006-10-10T05:25:40.126-07:00</updated><title type='text'>காமம் - II</title><content type='html'>அரவணைத்துக் கொள்! அன்பே&lt;br /&gt;அரவணைத்துக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்&lt;br /&gt;அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைப்படு!&lt;br /&gt;அதிகாரத்தோடு கேட்டுக்கொள்&lt;br /&gt;மோகப் படு!&lt;br /&gt;முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்&lt;br /&gt;&lt;br /&gt;உன் கரம் மட்டும் அறிந்த &lt;br /&gt;என் நெஞ்சத்தை&lt;br /&gt;உன் மார்பு கொண்டு பழுது பார்&lt;br /&gt;&lt;br /&gt;விதைத்துக் கொள்!&lt;br /&gt;விளைய விடு!&lt;br /&gt;மேய்ந்து கொள்!&lt;br /&gt;மீதம் வைக்கதே!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கம் அனைத்தும் அடக்கி விடு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மை கொள்! பெண்ணே&lt;br /&gt;ஆண்மை கொள்&lt;br /&gt;&lt;br /&gt;என் ஆயுள் முழுவதும் &lt;br /&gt;உன் அங்கம் மட்டும் பணி செய்ய!&lt;br /&gt;&lt;br /&gt;மோகப் புரட்சி செய்!&lt;br /&gt;நீயே தொடங்கு!&lt;br /&gt;நீயே முடி!&lt;br /&gt;&lt;br /&gt;சேர்த்துக் கொள்! செப்பனிடு!&lt;br /&gt;படர்ந்து கொள்! பறக்க விடு!&lt;br /&gt;&lt;br /&gt;என் விரல் கொண்டு&lt;br /&gt;உன் உடல் உழுது கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;என் உதட்டு வரிகளில்&lt;br /&gt;உன் உதடுகளால் எழுதிக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் விரல்களில் &lt;br /&gt;என் தலை முடிகளை தரம் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..&lt;br /&gt;என் வீரத்தை பிடுங்கிக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;அடைத்துக் கொள்!&lt;br /&gt;என்னில் உன்னை...&lt;br /&gt;உன்னில் என்னை...&lt;br /&gt;&lt;br /&gt;என் சுவாசப் பைகளில்&lt;br /&gt;உன் வாசத்தை மட்டும் நிரப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;உன் இடையினை என் கரங்களால்&lt;br /&gt;கட்டிப் போடு!&lt;br /&gt;&lt;br /&gt;உன் தீண்டல்களில்&lt;br /&gt;என் தோல்களை தூய்மைப்படுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உரசல்களில்&lt;br /&gt;என் ஆண்மையை தீயுட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கிரமித்துக் கொள்! அழகே&lt;br /&gt;ஆக்கிரமித்துக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் சிருங்காரத்தில்&lt;br /&gt;என்னை சிறைப்படுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;உன் பாதம் தொட&lt;br /&gt;என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!&lt;br /&gt;&lt;br /&gt;உன் இடை சுற்ற&lt;br /&gt;என் கரம் வேண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;உன் கனவுப் பொய்களை&lt;br /&gt;என்னில் மட்டும் நிஜமாக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்&lt;br /&gt;என்னிலிருந்து,&lt;br /&gt;உன்னைத்தவிர...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-116048314012396207?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/116048314012396207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=116048314012396207' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/116048314012396207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/116048314012396207'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2006/10/ii.html' title='காமம் - II'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-115892720682726675</id><published>2006-10-10T05:20:00.000-07:00</published><updated>2006-10-10T05:20:17.020-07:00</updated><title type='text'>காமம் - I</title><content type='html'>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;காயம் பட்டதென்னவோ&lt;br /&gt;உண்மைதான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மார் கூர்முனைகளில்&lt;br /&gt;குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் பஞ்சுப் பற்க்களால்&lt;br /&gt;கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் நகத்தூரிகைகளில்&lt;br /&gt;வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் இறுக்கங்களில் &lt;br /&gt;இளகி இடிபட்டுப் போன என் உடல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் இயக்கங்களால்&lt;br /&gt;இடம் பெயர மறுக்கும் என் இடை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் விரல் அழுத்தங்களில்&lt;br /&gt;விரைத்துப் போன என் விரல்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாமத்தில்..&lt;br /&gt;என்னவளின் காமத்தில்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காயம் பட்ட தென்னவோ&lt;br /&gt;உண்மைதான்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-115892720682726675?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/115892720682726675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=115892720682726675' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/115892720682726675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/115892720682726675'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2006/10/i.html' title='காமம் - I'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-115141579062365666</id><published>2006-06-27T06:33:00.000-07:00</published><updated>2006-06-27T06:45:44.753-07:00</updated><title type='text'>கனவு</title><content type='html'>மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே...சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில்...என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்..! எந்திரி..மணி எட்டாகுது..."&lt;br /&gt;&lt;br /&gt;சே..! பயங்கரமான கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இன்னைக்கி யுனிவர்சிட்டி போகனும்னு சொன்னியே, மணி எட்டச்சு..போகலயா..?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மதான்..பயங்கரமாக உலுக்கி எழுப்பி கொண்டிருந்தாள். ஒரு வழியாக கண் விழித்தேன். இரவு அதிக நேரம் டிவி பார்த்ததில் கண் எரிச்சலை கிளப்பியது இப்படித்தான் அடிக்கடி என் கனவுகளில் நான் கொல்லப்படுகிரேன். ஆனால் இறப்பதற்க்கு முன்னமே கனவு முடிந்து போகிறது அல்லது முடிக்கப்படுகிறது. இவ்வாறு நான் யோசிக்க தொடங்கியதும், யுனிவர்சிடி போக வேண்டும் என்பது ஞாபகம் வந்தது. கொஞ்சம் லைப்ரேரியில் வேலை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அடிப்படையில் இயற்பியல் படிக்கும் மாணவன். ஏற்கனவே பி.எஸ்.சியில் மூன்று வருடம் குப்பை கொட்டியாகி விட்டது, போததென்று இந்த இரண்டு வருடமாக எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அதிகமான குவாண்டம் கொள்கைகளையும், ரிலெட்டிவிட்டி தத்துவங்களையும் எழுதியோ படித்தோ கொண்டிருக்கிறேன். யுனிவர்சிட்டியில் முக்கியமாக சில புத்தகங்ளை தேட வேண்டும். இன்று அவள் நிச்சயம் வருவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நினைத்தது சரிதான். அவளை பார்பதற்க்காகதான் நான் லைப்ரேரி செல்கிறேனென்று. இந்த இரண்டு வருடமாக எனக்கு அவளைத் தெரியும், நீங்கள் நினைப்பதை விட அவள் மிக அழகானவள். இப்பொதைக்கு அவளைப் பற்றி இது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் என்னைவிட அதிகம் சிந்திப்பவள். வருங்காலத்தில் யுரேனியத்தில் பி.எச்.டி பண்ணும் ஆர்வத்தில் இருக்கிறாள். நான் அவளுக்கக சில புத்தககங்களை தேடிக்கொடுக்கவே செல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு பாரா முடிவதற்க்குள் நான் குளித்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்..! தோசையிலே முட்டை விடட்டும..?" அம்மா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி..ஏதோ...பண்ணு..." கொஞ்சம் சலித்துக்கொண்டேன். தோசை சூடாகவே இருந்தது. அப்பா வழக்கம் போல சன் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேகமாக சாப்பிட்டு முடிந்ததும், கருப்பு கலர் டி சர்ட் அணிந்து கொண்டேன். முனிச்சாலை ஸ்டாப்பில் நின்று கொண்டால் 21ம் நம்பர் வருமா என்பது சந்தேகம் தான். பெரியார் நிலையம் செல்வது தான் சரி. யோசித்துக்கொண்டிருக்கும் போதெ கூட்டம் குறைவாக 4ம் நம்பர் வந்தது. எனக்காகவெ ஒரு ஜன்னல் ஓரம் காலியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட் வாங்கி முடிந்ததும் எனது எண்ணங்களை தொடர்ந்தேன். கடந்த சில மாதங்களாக இந்த கனவு அடிக்கடி வருகிறது. அவன்... நீள முகம், லேசான மீசை, பான்பராக் பற்கள், கொஞம் அதிகமான மூக்கு, அரைகுரையாக வளர்ந்த தாடி, எப்போதும் எதாவது ஆயுதங்களுடன் என்னை எதிர்கொள்கிறான். சில சமயம் வில் போன்ற, கொஞ்சம் துப்பாக்கி கலந்த, ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்த....அம்புகள் பொருத்தி என்னை குறி பார்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில கனவுகள் நிஜ வாழ்க்கையில் நிஜமாகிறது என்பதை எங்கேயோ படித்ததாக&lt;br /&gt;ஞாபகம். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி நடக்குமா...? வயிற்றை கலக்கியது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவளுக்காக புத்தகம் தேடும் போது, சைக்கலாஜி பிரிவில் கனவுகள் பற்றி எதாவது புத்தகம் தேட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் நுழைந்து கொண்டிருந்தது பஸ். பஸ்ஸை விட்டிறங்கி, ரோட்டை கடந்து, மறு பக்கமுள்ள பல்கலைகழகம் செல்லும் நிறுத்தத்திற்க்கு சென்ற போது, சரியாக 21ம் நம்பர் வந்தது...வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு சீக்கிரம் பஸ் கிடைத்ததை நினைத்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் நம் வாழ்க்கையின் மிச்சங்களா..!? நம் உள்மனத்தின் பிரதிபலிப்பா...? நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறது. கனவுகளில் வண்ணங்கள் உண்டா? கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா? ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ' நான்ரெம்' எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இயற்பியல் மாணவன் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்க கூடிய கேள்வி தான். ஆனால் அடிப்படையில் படிக்கும் ஆர்வம் என்பது இயற்பியல் படிக்கும் மாணவனுக்கு கொஞம் அதிகம் தான் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் நாடார் காலேஜை கடந்து கொண்டிருந்தது. இன்று ஞாயிற்று கிழமையாதலால் பஸ்ஸில் அதிகம் கூட்டமில்லை. மார்கழி மாதமாக இருப்பதால் கொஞம் மேக மூட்டமாகவே இருந்தது. குளிர்காற்றும் வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸை விட்டு இறங்கியதும் எதிர் கடையில் அவள்..மிராண்டா குடித்து கொண்டிருந்தாள்...(எந்த இளிச்சவாயன் மாட்டினானோ..?) உடனே ஒரு கவிதை தோன்றியது....அடக்கிக் கொன்டேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள் (சிரித்தாளா...?)&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா...!(செல்லமாக தான்..) இவ்வளவு லேட். எங்கேயாச்சும் நின்னு தம் அடிச்சுட்டு வர்றியா...?".&lt;br /&gt;&lt;br /&gt;நான் புகை பிடிப்பதே இல்லையென்பதும், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதும், அவளுக்கு தெரிந்திந்தும், ஒவ்வொரு தடவை என்னை பார்க்கும் பொதும் இந்த கேள்வியை கட்டயமாக கேட்கிறாள் (ஒரு வேளை என்ன தம் அடிக்க சொல்கிறாளா..?)&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டில் காலியானதும் கடைக்கராரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு முன்னாடி நடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பணம் கொடுக்கலை..?" என் கைகளில் சாக்லேட்டை திணித்துக்கொண்டே "ரமேஷ் கொடுத்துட்டான்.." சாதரணமாக சொன்னள் (பாவம்! சோடப்புட்டி...!!).&lt;br /&gt;&lt;br /&gt;"உருகிப்போச்சு...உன் உடம்பிலே உஷ்ணம் அதிகம்..." அவள் கைப்பைக்கும், மார்புக்கும் நடுவில் சாக்லேட் வைத்திருந்தை, நினைத்துக் கொண்டே நான் சொன்னதை கேட்டு முறத்திருப்பாள். நான் பார்க்கவில்லை. வேறு எங்கெயோ, எதுவோ பெரிதாக தெரிந்ததை பார்த்துக்கொன்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்...மாக்கான்! இன்னைக்கி விட்டுக்கு சீக்கிரம் போகணும். பொண்னு பார்க்க வர்றாங்க..." சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தாள். அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சாக்லேட் என்னை என்னவோ செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி உன்னோட கனவு...என்னச்சு?" இவளிடமும் சொல்லியாகி விட்டது. என் கனவுகளைப்பற்றி என்ன அக்கரையாக கேட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மக்கு..கனவுங்கிறது நம்ம மனசுலே நினைக்கிற அதிகபட்ச ஆசைகளும், தினசரி வாழ்கையில் நடக்கிற நிகழ்சிகளும் கலந்து வர்றது தான்டா. நீ படுக்குறதுக்கு முன்னாடி எதாச்சும் இங்கிலிஷ் படம் பார்த்திருப்பே. அதுல வர்ற, ஒத்த கண்ணனோ, மொட்டதலையனோ உன்னை கொல்ல வந்திருப்பான். இதையெல்லம் மனசுலே போட்டு, புலம்பிக்கிட்டு இருக்கதே...லைப்புல அடுத்து என்ன பண்ணபோரேங்கிறைதை பற்றி யோசி...எங்க வீட்டுல வேற என்னை மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க..." எதுவோ எனக்கு உறைக்க ஆரம்பித்தது. யோசிக்கனும்!. "என்னடா...எதுவும் பேச மாட்றே..." என் தலையை கலைத்து விட்டாள். முடிவு செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி...சிக்கிரம் போய் அந்த கிளசிக்கல் மெக்கானிக் புக் வந்துருச்சான்னு கேட்டு வா...ஆத்தர் கோல்டுஸ்மித்டா....ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். வேற எந்த புக்குலேயும் புரிய மாட்டேங்குது." லைப்ரேரியனை நோக்கி சென்று கொண்டிருத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோல்டுஸ்மித் வந்திருந்தது. எடுத்து வைத்து விட்டு, சைக்கலாஜி பக்கம் சென்றென். 'டிரீம் அனாலிஸிஸ்' புது அட்டையுடன் இருந்தது. ஆசிரியர் ஏதோ ரஷ்ய பெயராக இருந்தது புரியவில்லை.&lt;br /&gt;'கனவுகல் நிஜத்தின் நாடகங்கள். இரவின் கருப்புத் திரைப்படங்கள். கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்.....' &lt;br /&gt;கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பாதி வார்த்தைகள் நானாக யுகித்து படித்து கொண்டிருந்தேன். லேசாக தாகம் எடுத்தது. ஜன்னல் ஓரம் இருந்த பிரிட்ஜை திறக்கும் போது....அங்கே ஜன்னலுக்கு வெளியே...&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். என் நெற்றிப்பொட்டுக்கு நடுவே...இரண்டு புருவங்களுக்கு மத்தியில்...மிக தெளிவாக...இம்மியளவும் பிசகாமல்...கூடவே என்னை எதுவோ பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-115141579062365666?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/115141579062365666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=115141579062365666' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/115141579062365666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/115141579062365666'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2006/06/blog-post.html' title='கனவு'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-113750147915821823</id><published>2006-01-17T04:35:00.000-08:00</published><updated>2006-04-19T06:41:51.283-07:00</updated><title type='text'>சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்</title><content type='html'>இந்த பதிவை நான் தொடங்கிய போது, சில விஷயங்களை&lt;br /&gt;கடைபிடிக்க வேண்டி நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முடிந்தவரை சுத்த தமிழில் எழுத வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுகதைகள் மற்றும் கவிதைகள் மட்டும் எழுத வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;அனுபவங்களையொ மற்றவைகளோ எழுத கூடாது.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;ஆனால் நான் எழுதியதோ ஒரு கதையும்.. ஒரு கவிதையும்...&lt;br /&gt;ஏன் என்னால் எழுத முடிவதில்லை? &lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;சோம்பேறித்தனம்&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;விசை பலகை மூலம் தமிழில் தட்டச்சு செய்வது(ம்ம்ம்..ரொம்ப கஷ்டம்)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;கற்பனை மிக குறைந்த நேரமே இருப்பது(மூன்று கதைகள் எழுதி பாதியில் கிடக்கின்றன)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;எனவே நண்பர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்&lt;/strong&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;என்பதால் எனது கொள்கைகளை உடைத்து...எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் இப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை நல்ல தமிழிலில் எழுத முயற்சி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-113750147915821823?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/113750147915821823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=113750147915821823' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/113750147915821823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/113750147915821823'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2006/01/blog-post.html' title='சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-111768290869791873</id><published>2005-06-01T20:24:00.000-07:00</published><updated>2005-06-01T20:28:28.700-07:00</updated><title type='text'>எனக்கான காதல்</title><content type='html'>உன்னை பார்த்த பிறகும்..&lt;br /&gt;ஒளிந்து கொள்கிறது..&lt;br /&gt;என் மனது உனக்குள்ளும்..&lt;br /&gt;உன் மனது எனக்குள்ளும் !&lt;br /&gt;&lt;br /&gt;நீ விட்டுச்சென்ற வாசனைகளில்&lt;br /&gt;மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!&lt;br /&gt;&lt;br /&gt;உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்&lt;br /&gt;இன்னும் மின்னுகிறது&lt;br /&gt;முன்னம் உள்ள புன்னகை !&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் காணமல் போன கனவுகள்&lt;br /&gt;தேடிக்கொண்டிருக்கின்றன&lt;br /&gt;உனது நினைவுகளை..!&lt;br /&gt;&lt;br /&gt;நீ கேட்காமல் விட்டுசென்ற&lt;br /&gt;என் வார்த்தைகள்&lt;br /&gt;முட்டிமோதிகொள்கின்றன&lt;br /&gt;என் வீட்டு சுவர்களில்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-111768290869791873?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/111768290869791873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=111768290869791873' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/111768290869791873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/111768290869791873'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2005/06/blog-post.html' title='எனக்கான காதல்'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13257613.post-111738186517751046</id><published>2005-05-29T08:46:00.000-07:00</published><updated>2006-01-17T05:03:39.076-08:00</updated><title type='text'>எண்ணிக்கை</title><content type='html'>சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எனது எண்ணிக்கையை நான் எப்போதுமெ சலித்துக்கொண்டதில்லை. சிறு வயதிலிருந்தெ எனது எண்ணிக்கை பழக்கம் துவங்கியதாக பாட்டி அடிக்கடி கூறுவாள். இரவு முழுவதும் வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதையும், அரிசியில் கலந்து போன பருப்புகளை எண்ணிக்கையோடு சேர்ப்பதையும் அனைவரும் வீட்டிற்க்கு வந்து அதிசயமாக பார்த்து சென்றதாக் மிக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிற்க்கோ தனது பையன் இப்படி சமர்த்தக இருந்ததில், அனைவரிடமும் தம்பம் அடித்து கொள்வதையும், வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சவால் விடுவதும், என்னிடம் பல விதமான எண்ணிக்கைகளின் புதிர்களை கேட்டும் நான் சொல்லும் பதில்களுக்கான எதிர் சவால் விடுவதுமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் வகுப்பு கூட முடிக்காத எங்கள் கிராமத்தில் யாருக்கும் எதிர் சவால் விடுவதில் தைரியம் இல்லை. இதனால் தான் என்னவோ என்னை மிக எளிதாக பக்கத்தில் உள்ள ட்வுன் பள்ளியில் இடம் கிடைத்தது. எங்கள் ஊர் தலைவர் தான் பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக பிடித்த மாணவனக இருந்ததில், பல பையன்களின் அன்புத்தொல்லைகளை தாங்க வேண்டியிருந்த்தது. சில கடைசி பென்ச் மாணவர்கள் மட்டும் என்னை கவிழ்பதில் சமயம் பார்த்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;அன்று எந்த ஆசிரியரும் வராத காரத்தினால் எல்லொரையும் பி. டி கிளாசிற்க்கு வருமாறு அறிவுப்பு வந்திருந்தது. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. இன்று நிச்சயமாக முத்துசாமி சொன்ன பந்தயதில் ஜெயித்து விடலாம். பந்தயம் என்னவென்றால் வேப்ப மரதிலிருந்து கீழ் விழும் இலைகளை அதிகமான எண்ணிக்கையில் யார் எடுப்பது என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துசாமி, கணேசன், தங்க ராசு எல்லோரும் சேர்ந்து கொண்டோ ம். முத்து சாமி தான் எண்ண ஆரம்பித்திருந்தான்.ஐம்பது, ஐம்பத்தி ஒன்று,.....ஒரே மூச்சில் நானும் எண்ண ஆரம்பித்திருந்தேன். என்னை சுற்றியிருந்த எல்லா சத்தங்களும் அடங்க தொடங்கின. எனது ஒரே குறியாக இலைகளை எண்ணுவதிலேயெ இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக இருட்டிக்கொண்டு வருவாதாக எனக்கு பட்டது. எப்போது படுத்தேனொ தெரியாது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க வாட்சுமேன் எழுப்பிய போது தான் தெரிந்தது காலை ஆகி விட்டதென்று. வாட்சுமேன் பக்கத்தில் அம்மாவும் நிற்பது தெரிந்த போது தான் விசயம் தெரிந்தது. வீட்டில் என்னை நேற்று முழுவதும் தேடியிருக்கவேண்டும். அந்த கவலை அம்மாவின் வீங்கிப்போன முகத்திலெ தெரிந்தது. இரவு முழுதும் அழுதிருக்கவேண்டும். அம்மா என்னை அணைத்துக் கொண்டு அழைத்துப் போனாள். மஞ்சள் வாசம் வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் சட்டென்று நினைவிற்க்கு வந்தது. 1887 நேற்று நான் எண்ணிக்கையில் விட்ட இலைகள். நிச்சயமாக முத்துசாமியொ, தங்கராசோ இந்த எண்ணிக்கையை அடைந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெ எனது எண்ணிக்கை பயணம் கல்லூரி வரை தொடர்ந்தது. கல்லூரியில் பலரது காதலுக்கு எனது எண்ணிக்கை பயன் பட்டது. தனது காதலி எத்தனை தடவை மஞ்சள் புடவை போட்டிருந்தால் என்பதில் இருந்தது அவள் எத்தனை தடவை நாக்கு கடித்தாள் என்பது வரை என்னிடமிருந்து எண்ணிக்கை கணக்குகள் சென்று கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் அப்படித்தான் யாருடையொ காதலியின் ஏதோ எண்ணிக்கையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சரியாக கேட்காமல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததால் எரிச்சலடைந்து சற்று சத்தமாகவெ சொல்லிவிட்டேன். திடீரென என் பின்னாலிருந்து ஒரு செருப்பு என் முதுகை தாக்கியது. திரும்பி பார்த்தேன். என் கண்கள் அப்படியெ நின்று போனது. நான் சொன்ன ஒரு எண் அவளுடைய எதோ ஒரு அளவு எண்ணிக்கையில் ஒத்து போனதில், அவளுடய செருப்பு என் மேல் விழுந்திருக்கிறது. மேலும் அவள் என்னை எதேதோ சொல்லி என்னை திட்டி கொண்டிருப்பதையும், எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், நான் நினைவுக்கு வந்த பிறகெ தெரிந்தது. மொத்தமாகவெ என்னை அவளிடம் இழந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மகேந்திரன் சொல்லிதான் அவள் பெயர் மதுமதி என்பதும், அவள் இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது.பிறகு அவளை நான் எனது எண்ணிக்கை புலமை மூலம் அசத்தியதையும், அவள் என்னுடன் தனது வீட்டை விட்டு வந்ததையும், அவள் வீட்டார் திரும்பவும் என்னை தேடி வந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதையும் எழுதுவதற்க்கு குறைந்தது நாற்பது வரிகளவாது தேவைப்படும். இப்போது வேண்டாமே...&lt;br /&gt;&lt;br /&gt;இதோ கல்யாணமாகி ஆறு மாதங்களாகி விட்டது. மது என்னுடன் மிக சந்தோசமாகவே இருக்கிறாள். முத்துசாமி, தங்கராசு, கணெசன், மகேந்திரன் நம்மை பார்ப்பதற்க்காக வந்திருக்கிறார்கள். பழைய விசயங்களை நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் காலை எழுந்தவுடன், நீச்சல் குளம் செல்வதென முடிவு செய்தோம். முத்துசாமி தான் கிராமத்தில் நான் தான் எப்பொதும் அதிக நேரம் தண்ணிரீல் இருப்பேன் என்றும், எண்ணிக்கையில் ஒரு தடவை 999 வரை சென்றதாகவும் ஞாபகப்படுத்தினான். எனக்கு பெருமையாக இருந்தது. இன்றும் அதெ போல் தண்ணீரில் யார் அதிக நேரம் மூழ்கி இருக்கபோவதென பந்தயம் செய்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாதமாக இருந்ததில் நீச்சல் குளத்தில் அதிகம் பேர் இல்லை. நாங்கள் எங்கள் எண்ணிக்கையை ஆரம்பித்தோம். இந்த தடவை கணேசன் எண்ண ஆரம்பித்திருந்தான். 15, 16, 17, ...&lt;br /&gt;&lt;br /&gt;நானும் எண்ணிக்கையை ஆரம்பித்தென். முதலில் கொஞ்சம் மூச்சையடைத்து, இருந்தாலும் எனது எண்ணிக்கையை தொடர்ந்த்து கொண்டிருந்தேன். 960...., 989.....................................999, 1000, 1001, 1002........... மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக வேறு யாரும் இவ்வளவு நேரம் இருந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்க்கு வந்த போது வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. நிச்சயமாக மதுவுடைய சொந்தங்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு மாதங்காளாகவெ இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவளை தேடி அவள் சொந்தகாரர்கள் வருவதும், போவதும்.&lt;br /&gt;இந்த தடவை எங்கள் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். மது கொஞ்ச அதிகமாகவே அழுதிருந்தாள். கண்களுக்கு கீழெ கருமை நிரம்பி.... இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவள் அருகில் அவளுடைய மாமா பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். அவனைதான் மதுவுக்கு கட்டுவாதாக இருந்தது. ஆனால் நமது காதல் கல்யாணத்தில் எல்லாம் நின்று போனது. அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அழுகும் போது இவன் அவளின் தலையை கோதிவிடுவதும். அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவளை லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தான். அவன் முகத்தில் அதிகப்படியான சிரிப்பு புதைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தலைக்கு மேல் உள்ள குத்துவிளக்கு அணைந்து போயிருந்தது. நான் வாங்கியிருந்த எல்லா பரிசுகளையும் யார் யாரோ பார்த்துகொண்டிருந்தார்கள். வேன் வந்து விட்டதாக யாரோ கூறிய போது மது அதிகமாக கதறி அழுதாள். இப்போது அவன் மதுவை இருக்கமாக கட்டிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சே..! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13257613-111738186517751046?l=flashmani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://flashmani.blogspot.com/feeds/111738186517751046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13257613&amp;postID=111738186517751046' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/111738186517751046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13257613/posts/default/111738186517751046'/><link rel='alternate' type='text/html' href='http://flashmani.blogspot.com/2005/05/blog-post_29.html' title='எண்ணிக்கை'/><author><name>flashmani</name><uri>http://www.blogger.com/profile/03881566838942115020</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>46</thr:total></entry></feed>
