வானவில்

Tuesday, October 10, 2006

காமம் - II

அரவணைத்துக் கொள்! அன்பே
அரவணைத்துக் கொள்!

புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்

ஆசைப்படு!
அதிகாரத்தோடு கேட்டுக்கொள்
மோகப் படு!
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்

உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் மார்பு கொண்டு பழுது பார்

விதைத்துக் கொள்!
விளைய விடு!
மேய்ந்து கொள்!
மீதம் வைக்கதே!

அங்கம் அனைத்தும் அடக்கி விடு!

ஆண்மை கொள்! பெண்ணே
ஆண்மை கொள்

என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய!

மோகப் புரட்சி செய்!
நீயே தொடங்கு!
நீயே முடி!

சேர்த்துக் கொள்! செப்பனிடு!
படர்ந்து கொள்! பறக்க விடு!

என் விரல் கொண்டு
உன் உடல் உழுது கொள்!

என் உதட்டு வரிகளில்
உன் உதடுகளால் எழுதிக் கொள்!

உன் விரல்களில்
என் தலை முடிகளை தரம் பார்!

உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்!

அடைத்துக் கொள்!
என்னில் உன்னை...
உன்னில் என்னை...

என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போடு!

உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்து!

உன் உரசல்களில்
என் ஆண்மையை தீயுட்டு!

ஆக்கிரமித்துக் கொள்! அழகே
ஆக்கிரமித்துக் கொள்!

உன் சிருங்காரத்தில்
என்னை சிறைப்படுத்து!

உன் பாதம் தொட
என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!

உன் இடை சுற்ற
என் கரம் வேண்டு!

உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்கு!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
என்னிலிருந்து,
உன்னைத்தவிர...!

காமம் - I

காயம் பட்டதென்னவோ
உண்மைதான்!


உன் மார் கூர்முனைகளில்
குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..


உன் பஞ்சுப் பற்க்களால்
கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..


உன் நகத்தூரிகைகளில்
வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..


உன் இறுக்கங்களில்
இளகி இடிபட்டுப் போன என் உடல்..


உன் இயக்கங்களால்
இடம் பெயர மறுக்கும் என் இடை..


உன் விரல் அழுத்தங்களில்
விரைத்துப் போன என் விரல்கள்..


ஒரு சாமத்தில்..
என்னவளின் காமத்தில்..


காயம் பட்ட தென்னவோ
உண்மைதான்!